Friday, August 26, 2016

8:32 PM

நபிகள் நாயகம் அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி கட்டளையிட்டார்கள்!!!


நபி(ஸல்) அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்----

1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.

2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது.

3. தும்மியவருக்கு அவர், “அல்ஹம்துலில்லாஹ்“ (“அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்“ என்று) சொன்னால், “யர்ஹமுக்கல்லாஹ்“ (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக!) என்று பிரார்த்திப்பது.

4. சலாமுக்கு (முகமனுக்கு) பதிலுரைப்பது.

5.அக்கிரமத்திற்குள்ளானவருக்கு உதவுவது.

6. விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது.

7. சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது.
(ஷஹீஹ் புகாரி 2445)

- நபிகள் நாயகம்.

No comments:

Post a Comment

جميع الحقوق محفوظة لـ tamilsolution-v1 2013-2015 © تطوير :